புதுச்சேரியில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை | வெளிவந்த சிறப்பான தகவல்கள்

x

புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். யுடிசி மற்றும் எல்டிசி பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி ஆணையை வழங்கி வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, கல்வி, கூட்டுறவு, சுகாதாரத்துறை, மின்துறை, வருவாய், காவல்துறை என அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்