கொச்சி வாட்டர் மெட்ரோவின் 10 லட்சமாவது பயணிக்கு சிறப்பு பரிசு

x

கேரளாவில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அரசு சார்பில் கொச்சி வாட்டர் மெட்ரோ சேவை கொண்டு வரப்பட்டது. இதனை கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் தற்போது10 லட்சத்திற்கும் மேற்போட்டோர் பயணித்துள்ளனர். நேற்று10 லட்சம் ஆவது பயணியான 6ம் வகுப்பு மாணவிக்கு நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. வரும் 26ம் தேதி, இந்த சேவை தொடங்கி 6 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில், சேவையை மேலும் விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்