ஜனாதிபதி வருகைக்காக கழிவுநீர் கால்வாய் மறைப்பு வைரலான அதிர்ச்சி வீடியோ!

x

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகையை ஒட்டி, புதுச்சேரியில் கழிவுநீர் கால்வாயை திரைகொண்டு மூடி மறைத்த வீடியோ பரவியதால், அந்த திரை அகற்றப்பட்டது. திரௌபதி முர்மு இன்று புதுச்சேரி செல்வதால், நகரை அழகுபடுத்தும் வகையில், மறைமலை அடிகள் சாலையில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை பிரம்மாண்ட திரை கொண்டு மறைத்திருந்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன், கால்வாயை திரையால் மூடுவதை சமூக வலைதளப் பதிவர்கள், விமர்சித்திருந்தனர். இதையடுத்து, கழிவுநீர் கால்வாய் பகுதியில் வைத்திருந்த திரையை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்