நாட்டையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் - உள்ளே துடிக்கும் 40 உயிர்கள் - 4 நாட்களாக தொடரும் போராட்டம்

x

உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காஷியில், சுரங்கப் பணிகளின்போது ஏற்பட்ட விபத்தில் 40 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் வகையில், 900 மில்லிமீட்டர் ஸ்டீல் பைப்பை செலுத்தும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இதற்கான ட்ரில்லிங் பணி நடைபெற்ற போதிலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதை செய்ய முடியவில்லை. இதன் காரணமாக மற்றொரு ட்ரில்லிங் இயந்திரத்தை வரவழைக்கும் முயற்சி நடைபெறுகிறது. அதிவேகமாக ட்ரில்லிங் பணிகள் நடந்தால் சுரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், மீட்புப் பணிகள் தாமதமாவதாகக்கூறி, சுரங்கத்திற்கு வெளியே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சுரங்க விபத்தில் சிக்கியவர்கள், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம், ஒடிசாவை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்