தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கிய பிரச்சார ஹெலிகாப்டர்..தப்பிய அரசியல் பிரமுகர்-பரபரப்பு காட்சிகள்

x

மகாராஷ்டிர மாநிலம் மஹத் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சிவசேனா கட்சியின் துணைத்தலைவர் சுஷ்மா அந்தாரே, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ராய்காடு பகுதியில் இருந்து ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டிருந்தார். அவரை ஏற்றிக் கொண்டு செல்வதற்காக, தனியார் ஹெலிகாப்டர் ஒன்று மைதானத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரை இயக்கிய 2 பைலட்டுகளும் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்