தடுத்து நிறுத்திய காவலர்கள்... ஆரத்தி எடுத்து அட்வைஸ் சொன்ன ஷர்மிளா - போராட்டத்தில் நடந்த சுவாரஸ்யம்

x

தெலங்கானாவில், முதல்வர் சந்திரசேகரராவ் தொகுதிக்குச் சென்று மக்களை சந்திக்க அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். தெலங்கானா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி நடத்தி வரும் ஒய்.எஸ். ஷர்மிளா, முதல்வர் சந்திரசேகர ராவின் கத்வால் தொகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய இருந்தா​ர். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் இருந்து ஒய்.எஸ்.ஷர்மிளா புறப்பட்டபோது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாருக்கு ஆரத்தி எடுத்து, அவரவர் வேலையை பார்க்குமாறு கூறிய ஷர்மிளா, தனது வீட்டிற்கு வெளியே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்