ரூ.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - அதிரடி காட்டிய சுங்கத்துறை

x

டெல்லி விமான நிலையத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உஸ்பெகிஸ்தான் தலைநகரான தாஷ்கண்டில் இருந்து வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் 8 பேர் கொண்ட குழுவின் உடமைகளை சோதித்ததில், 5 கிலோ 319 கிராம் எடை கொண்ட 50 தங்க சங்கிலிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்ததது. இதனையடுத்து அவர்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், விசாரித்து வருகின்றனர்.

ரூ.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - அதிரடி காட்டிய சுங்கத்துறை


Next Story

மேலும் செய்திகள்