இளம் வீராங்கனைகளுக்கு சர்ப்ரைஸ் - சிறுமிகளுடன் செல்ஃபி எடுத்த சச்சின்

x

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்திற்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வருகை தந்தார். அங்கு கால்பந்து விளையாடிய சிறுமிகளை, சச்சின் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோர் சந்தித்து உரையாடினர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சச்சின், தனக்கு சொந்தமான சச்சின் டெண்டுல்கர் தொண்டு நிறுவன குழுவினர், ராஞ்சியில் உள்ள தொண்டு நிறுவனத்தில் பொழுதை கழித்தது மறக்க முடியாத நிகழ்வு என்று குறிப்பிட்டார். மேலும் கல்வி, விளையாட்டு, ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்