சபரிமலை மகரஜோதி மனித செயலா? வெளிவந்த பரம ரகசியம்... உண்மையை உடைத்த தேவசம்போர்டு

x

சபரிமலை பொன்னம்பலமேட்டில், மனிதர்களாலேயே மகரஜோதி ஏற்றப்படுகிறது, என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். கடந்த 15ம் தேதி நடைபெற்ற மகரஜோதி தரிசனத்திற்கும், சபரிமலையில் கூட்டம் அலைமோதியது. பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதி, இயற்கையாகவே தெரிகிறதா... அல்லது மனிதர்களால் ஏற்றப்படுகிறதா என்ற கேள்விகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதி, மனிதர்களாலேயே ஏற்றப்படுகிறது என்றும், பழங்குடியின தலைவர்கள் இதனை செய்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்