ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய தகவல்

x

சபரிமலையில் கடந்த 5 நாட்களாக பக்தர்களின் கூட்டம் அலைமோதும் நிலையில், பக்தர்களின் சாமி தரிசன நேரத்தை மேலும் 2 மணி நேரம் கூட்ட முடியுமா என தேவசம் போர்டிடம் கேரள உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது. தற்பொழுது தரிசன நேரம் 17 மணி நேரமாக உள்ளதால், தரிசன நேரத்தை மேலும் அதிகரிக்க முடியாது என மேல் சாந்தி கண்டரூ ராஜீவ்காரு தெரிவித்துள்ளார். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த சி.ஆர்.பி.எப் வீரர்களை ஈடுபடுத்தவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு வரம்பு 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்