"ஒரு நிமிஷம் நில்லுங்கடா, போய்க்கிறேன்..!" - சாலையை கடக்க திக்குமுக்காடும் யானை

x

சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதியில் சாலையில் நடமாடிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும், சோதனைச் சாவடி அருகே வர முற்பட்ட காட்டு யானையை அங்கு பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார், இங்கே வராதே என சத்தமிட்டனர். சிறிது நேரம் கழித்து யானையானது, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.


Next Story

மேலும் செய்திகள்