நாட்டை உலுக்கும் சுரங்க விபத்தில் தொடர்பா? - அதானி குழுமம் விளக்கம்

x

உத்தரகாண்டில், சுரங்கப் பாதை கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நவ்யுகா நிறுவனம், அதானி குழுமத்துக்குச் சொந்தமானது என்று செய்திகள் வெளியான நிலையில், அதானி குழுமம் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் தங்களை தொடர்புபடுத்த சில சக்திகள் முயற்சிப்பதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. சுரங்க கட்டுமானத்தில் அதானி குழுமத்துக்கோ அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கோ எந்தவிதமான நேரடி மற்றும் மறைமுக தொடர்பு இல்லை என்றும், சுரங்க கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்துடன் தங்களுக்கு எந்த விதமான பங்கும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்