மகளின் நீண்ட நாள் கனவு... தந்தை மொபைலுக்கு அடுத்தடுத்து வந்த ஆசை மகளின் அதிர்ச்சி போட்டோஸ்

x

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த ஷிவ்புரி என்பவரின் மகளான காவ்யா கடத்தப்பட்டதாக, அவரது புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் வந்தன. அதில், காவ்யாவின் கைகள் மற்றும் கால்களை கயிற்றால் கட்டி, கடத்திய நபர் 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், இந்தூரில் விடுதியில் தங்கியபடி, ​​கோட்டாவில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படிப்பதாகக் கூறி, காவ்யா ஏமாற்றி வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இந்தூரில் உள்ள அறையில் சோதனை செய்தபோது, காவ்யா கடத்தப்படவில்லை என்பதும், அனைத்தும் பொய்யானது என்பதையும் கண்டறிந்த போலீசார், கடத்தல் நாடகம் மேற்கொண்டதற்கான பொருட்களையும் கண்டெடுத்தனர். கடத்தல் நாடக விவகாரத்தில் உதவிய போலீசார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்தியதில், வெளிநாடு செல்ல பணம் தேவைப்பட்டதால், இந்த கடத்தல் நாடகத்தை காவ்யா அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது. மேலும், தலைமறைவாக உள்ள காவ்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்