" கேரளா மற்றும் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை"- இந்திய வானிலை கொடுத்த Rain அலர்ட்

x

கேரளாவின் திருவனந்தபுரம், வயநாடு, பாலக்காடு, பத்தனம்திட்டா, கோட்டயம், திருச்சூர் ஆகிய பகுதிகளில் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

கடந்தசில நாட்களாக கேரளாவின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலையில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவனந்தபுரம் உட்பட 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

தமிழகத்திலும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்