ஐரோப்பாவில் கால்பதித்த ராகுல்காந்தி | Rahul gandhi

x

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி ஐரோப்பா நாடுகளில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.ஐரோப்பா நாடுகளில் ஒரு வார காலம் பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி, ஐரோப்பிய யூனியன் வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஐரோப்பிய வாழ் இந்தியர்கள் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

இன்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் ஐரோப்பிய ஆணைய எம்.பி.க்களை சந்தித்து பேசுகிறார். நாளை மறுதினம் (8-ம் தேதி) பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் ராகுல்காந்தி, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் பேசுகிறார். அதைத் தொடர்ந்து வரும் 9ம் தேதி பாரீஸில் நடக்கும் தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர், நார்வே செல்லும் ராகுல்காந்தி, வரும்10ஆம் தேதியன்று இந்திய வம்சாவளியினரை சந்தித்துப் பேசுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்