புதுச்சேரி பெண் அமைச்சரின் தலையை வேறு பெண்ணின் படத்துடன் ஒட்ட வைத்து பேனர் - அமைச்சர் அதிருப்தி

x

புதுச்சேரி பெண் அமைச்சரின் தலையை வேறு பெண்ணின் படத்துடன் ஒட்ட வைத்து பேனர் - அமைச்சர் அதிருப்தி

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில், பாப்ஸ்கோ நிறுவனத்தின் சார்பில், தீபாவளி சிறப்பு அங்காடி திறக்கப்பட்டது.

விழாவுக்காக பாப்ஸ்கோ அதிகாரிகள் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் சாய் சரவணன், சந்திர பிரியங்கா ஆகியோரை வரவேற்று பேனர் வைத்திருந்தனர்.

இதில், அமைச்சர் சந்திர பிரியங்காவின் தலையை, பட்டுப்புடவையில் இருக்கும் பெண்ணின் படத்துடன் ஒட்ட வைத்து பேனர் வைத்திருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சந்திர பிரியங்கா, அதிகாரிகளிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து, அதிகாரிகள் அவசர அவசரமாக ஒட்டுவேலை செய்யப்பட்ட பேனரை அகற்றிவிட்டு, புதிய பேனரை வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்