பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

x

சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், பி.எஸ்.எல்.வி ராக்கெட் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு மிகவும் நம்பகத்தகுந்ததாக இருப்பதாகவும், முழு வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு அடுத்த ஆண்டு முதல் பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் குறிப்பிட்டார். இந்த ஆண்டில் இஸ்ரோ அதிக விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்த சோம்நாத், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில், பி.எஸ்.எல்.வி ராக்கெட் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து, ககன்யான் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் சோம்நாத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்