தனியார் வங்கி ஊழியர்களின் டார்ச்சர் - 'ட்வின்ஸ்'மகன்களுடன் தாய் கொடூர முடிவு

x

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீக்குளித்து தற்கொலை

இரட்டை மகன்களுடன் தற்கொலை செய்த தாய்

கடன் சுமையால் குடும்பத்தினர் தற்கொலை ?

தனியார் வங்கி ஊழியர்களின் நெருக்கடியே காரணம் - புகார்

கடன் சுமை மற்றும் தனியார் வங்கி ஊழியர்களின் நெருக்கடியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் அம்பலபாடியை சேர்ந்த சுகன்யா என்பவர், தன் இரட்டை மகன்களான நிஷித் மற்றும் நிகித் ஆகியோருடன் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். ஜே.பி நகரில் வசித்து வந்த இவர்கள், தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்றதாகவும், கடனை திருப்பி கொடுக்க முடியாததால் வங்கி ஊழியர்களின் நெருக்கடிக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்