அரசு பேருந்தில் ப்ரீ வெட்டிங் ஷூட்.. இணையவாசிகளை கவர்ந்த ஜோடி..

x

இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பாகவே ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்துவது ஃபேஷனாகி வருகிறது. மலைப்பகுதி, அடர்ந்த காடு, அருவி, கடற்கரை என தொடங்கி விவசாய நிலங்களை கூட இளம் ஜோடிகள் விட்டு வைக்காமல் போட்டோ ஷூட் நடத்துகின்றனர். தற்போது இதையும் மிஞ்சும் விதமாக, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், திருமணம் செய்யவுள்ள இளம்ஜோடி, அரசுப் பேருந்தில் ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்தி உள்ளனர். மணமகள் பேருந்தின் முன்பக்கம் இறங்கி வர, மணமகன் பேருந்தின் பின்பக்கம் இறங்கி வருவது போன்று காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. இணையவாசிகள் பலரும் இதை ரசிக்கும் நிலையில், பொது மக்களுக்கு இடையூறாக இதுபோன்று ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்