"திறனற்ற அரசியல் கட்சிகளால்" கர்நாடகாவுக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ் கருத்து -சர்ச்சையை கிளப்பிய X பதிவு

x

நடிகர் சித்தார்த் தனது பட நிகழ்ச்சிக்காக, பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, காவிரி பிரச்சனையை முன்வைத்து ஒரு அரசியல் கட்சியின் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து சித்தார்த்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜும் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், திறமையில்லாத அரசியல் கட்சிகளால் பல ஆண்டுகளாக பிரச்சனையை தீர்க்க முடியாத நிலையில், கலைஞர்களுக்கு நெருக்கடி கொடுப்பது தவறானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கன்னட மொழியில் வெளியிட்ட பதிவில், நம் காவிரி என்று ஹேஷ்டேக் செய்துள்ள பிரகாஷ் ராஜ், ஆங்கிலத்தில் வெளியிட்ட பதிவில், அந்த வார்த்தையை தவிர்த்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்