"இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் பிரக்ஞானந்தா" நேரில் அழைத்து பாராட்டிய அதானி

x

தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தாவை தொழிலதிபரும் அதானி குடும்பத்தின் தலைவருமான கௌதம் அதானி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். செஸ் உலகில் தொடர்ந்து விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பிரக்ஞானந்தாவை ஆதரிப்பது பாக்கியம் என அவர் தெரிவித்துள்ளார். இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் வெற்றி இந்திய இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் பாராட்டியுள்ளார். இந்தியாவால் எதையெல்லாம் செய்ய முடியும் என்பதை பிரக்ஞானந்தா பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்துள்ள கௌதம் அதானி, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்