ED-யின் அதிகாரங்கள்.. தீர்ப்பு எப்போது?

x

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உறுதிசெய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுக்கள் மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தது. இதுதொடர்பான மனுக்களை விசாரித்து வரும் நீதிபதி எஸ்.கே.கௌல், டிசம்பர் 25- ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால், விரைவாக விசாரித்து தீர்ப்பு கூற இயலாத சூழல் உருவாகியுள்ளதால், விசாரணையை எட்டு வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அத்துடன் இந்த மனுக்களை விசாரிக்க வேறு ஒரு அமர்வை ஏற்படுத்தும் வகையில் தலைமை நீதிபதியிடம் உரிய உத்தரவை பெறவும் அவர் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்