"பொங்கலோ பொங்கல்"... ஆளுநர் மாளிகையில் தமிழிசை

x

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா களைகட்டியது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். பொங்கல் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் வைத்து மகிழ்ந்தார். கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா உற்சாகமாக நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் பரிசாக புதுப்பானைகளை வழங்கினார். மேலும், இரண்டு முக்கிய கோப்புகளுக்கு தமிழிசை சவுந்தரராஜனிடம் ரங்கசாமி ஒப்புதல் பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்