"அதானியின் மூலதனமே பிரதமர் மோடி தான்.." - ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு

x

மோடி ஆட்சியில் பெருமுதலாளிகளுக்கு நீதியும், நாட்டு மக்களுக்கு அநீதியும் இழைக்கப்படுவதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் கோட்டாவில், (Godda) ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். பொதுமக்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் தொடர்புடைய மசோதாவை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். அதானியின் பெயரை எடுத்துக்கொண்டாலே, பிரதமர் மோடி தான் அவரது மூலதனம் என்பதை மக்கள் ஒரு நொடியில் புரிந்துகொள்வார்கள் என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார். பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாடு முழுவதும் வெறுப்பை பரப்பி வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்