"உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம்.." சுவாரசியமாக பேசிய பிரதமர்

x

வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் நமது பொருளாதாரம் குறித்த நம்பிக்கை வளர்ந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வன ஆராய்ச்சி நிறுவனத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி ​வைத்தார். அமைதியில் இருந்து செழிப்பிற்கு என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், மத்திய அமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். மாநாட்டையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டுரசித்தார். பின்னர் உரையாற்றிய பிரதமர், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் நமது பொருளாதாரம் குறித்த நம்பிக்கை வளர்ந்திருப்பதாகவும், உத்தரகாண்ட் மாநிலம் தெய்வீகத்தையும், வளர்ச்சியையும் இணைப்பதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்