பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்...கடைசியில் அவர் சொன்ன வார்த்தை

x

செஸ் வீர‌ர் பிரக்ஞானந்தாவும் அவரது குடும்பத்தினரும் பிரதமர் மோடியுடன் அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது, உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வாங்கியதை, பிரதமர் மோடிக்கு காண்பித்தார். இதையடுத்து, பிரக்ஞானந்தாவையும், அவரது பெற்றோரையும் பிரதமர் மோடி வாழ்த்தினார். இந்திய இளைஞர்கள் எந்த தளத்திலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு உதாராணமாக பிரக்ஞானந்தா திழ்வதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, பிரதமரின் பாராட்டுகள் தன்னையும், தனது பெற்றோரையும் ஊக்கப்படுத்தியதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்