மின்வெட்டால் கொந்தளித்த மக்கள்.. முற்றிய வன்முறை.. பறந்த கற்கள்.. போலீசார் துப்பாக்கிச்சூட்டில் பலியான 3 பேர்..

x

கதிகாரின் பர்சோய் பகுதியருகே தொடர் மின்வெட்டு மற்றும் சீரற்ற மின் விநியோகத்தை கண்டித்து, மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது போராட்டக்காரர்கள் அலுவலகத்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்டதை தொடர்ந்து, போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க முயற்சித்துள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்