உபி பெண் இந்து துறவி மீது தாக்குதல்

x

பரமக்குடியில் காரில் சென்ற உத்தரப்பிரதேச பெண் துறவி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் துறவியான ஷிப்ரா பதக், ராமேஸ்வரம் செல்வதற்காக பரமக்குடி வந்துள்ளனர். அரியனேந்தல் என்ற இடத்தில், அவரது காரை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காரின் கண்ணாடி உடைந்து, துறவி ஷிப்ரா பதக்கின் கையில் காயம் ஏற்பட்டது. தமிழகத்தில் ராமர் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி அந்த கும்பல் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து காவல்துறையிடம் ஷிப்ரா பதக் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்