ஆர்டர் செய்தது சிக்கன்,மட்டன் கறி... பார்சலில் வந்ததோ எலிக்கறி.. ஷாக் ஆன நபர் - வெளியான பகீர் வீடியோ

x

மும்பை பாந்த்ராவில் உள்ள பஞ்சாபி உணவகம் ஒன்றில், அனுராக் சிங் மற்றும் அவரது நண்பர் அமீன் ஆகியோர் சிக்கன் மற்றும் மட்டன் கறிகளை ஆர்டர் செய்து உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சிக்கன் கறியில் வழக்கத்திற்கு மாறான சுவையில் இறைச்சி ஒன்று இருப்பதை உணர்ந்த சிங், கூர்ந்து கவனித்ததில் அது இறந்த எலிக்குட்டி என்பதை கண்டறிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிங், அதுகுறித்து மேலாளரிடம் கேட்டபோது, அவர் மழுப்பலான பதிலளித்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்