"இப்ப தான் குளு குளுனு இருக்கு" - காற்றோடு பெய்த கனமழை - வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

x

திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விருதுநகர் மற்றும் புதுச்சேரியில் திடீரென கார்மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்த‌து

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சுற்றியுள்ள சென்னாவரம், பிருதூர், மருதாடு, மும்முனி உட்பட பல்வேறு பரவலாக மழை பெய்த‌தால் வெப்பம் தணிந்த‌து.

செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், ஆத்தூர் உள்ளிட்ட பல இடங்களில், திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர், மல்லி மம்சாபுரம், வன்னியம்பட்டி, நத்தம்பட்டி, வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த‌தால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

புதுச்சேரியில், உருளையன்பேட்டை, உப்பளம், முத்தியால்பேட்டை, மண்ணடிப்பட்டு, காலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கார்மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்த‌து.


Next Story

மேலும் செய்திகள்