இளம் மல்யுத்த வீரர்களுக்கு அடுத்தகட்ட செயல்திட்டம்.. வெளியான அறிக்கை

x

இளம் மல்யுத்த வீரர்களுக்கான அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து, மல்யுத்த கூட்டமைப்பின் தற்காலிக அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த 6 வாரங்களில் 15 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குரோஷியாவின் ஜாக்ரெப் ஓபன், கிர்கிஸ்தானில் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று, துருக்கியில் உலக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகளுக்காக இளம் வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சியளித்து தயார் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்