ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்

x

ஜம்மு கஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களைக் கண்டதும் மறைந்துள்ள பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில், 2 அதிகாரிகள் உட்பட 4 ராணுவ வீர‌ர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதிகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்