காங்கிரஸ் கட்சியில் நியமித்த புதிய ஒருங்கிணைப்பாளர்கள்

x

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒருங்கிணைப்பாளர்கள் குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. தொகுதி பங்கீடு, மாநில வாரியாக பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வெவ்வேறு மாநிலங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஒருங்கிணைப்பாளராக பெங்களூரை சேர்ந்த பவ்யா நரசிம்மமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒருங்கிணைப்பாளர்கள் குழு, தங்களுக்கு கொடுக்கப்பட்ட மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்தும், பிரச்சாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்


Next Story

மேலும் செய்திகள்