"நான் கப்பல்-ல கேப்டனா இருக்கேன்"...உதார் விட்டு பணத்தை கறந்த இளைஞர் - காரைக்கால் போலீஸ் போட்ட கிடுக்கிப்பிடி

x

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் சேசு விக்னேஷ். இவர், காரைக்காலை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்த பழக்கத்தில் காரைக்கால் பகுதியிள்ள மீனவ கிராமத்து நிர்வாகிகளை தொடர்பு கொண்ட இவர், தான் கப்பலில் கேப்டனாக வேலை செய்வதாகவும், மீனவ சமுதாயம் முன்னேற, அச்சமுதாய இளைஞர்களுக்கு கப்பலில் வேலை வாங்கி தருவதாகவும் கூறியிருக்கிறார். தொடர்ந்து, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, சுமார் 63 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்ற சேசு விக்னேஷ், அதன் பின் தலைமறைவான நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த காரைகால் போலீசார், தலைமறைவாக இருந்த சேசு விக்னேஷை கைது செய்த நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்