ஒரே நாளில் 100 பேருக்கு மேல் மருத்துவமனையில் அனுமதி - திருப்பதியில் பரபரப்பு

x

திருப்பதி அருகே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பிரசாதம் சாப்பிட்ட கிராம மக்கள் 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி அருகேயுள்ள கே.வி.புரத்தைச் சேர்ந்த கிராமத்தில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கிராம மக்கள் பெரிய அளவில் விநாயகர் சிலை வைத்து பூஜை நடத்தி பொங்கல், புளியோதரை, சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து பின்னர் அவற்றை கிராம மக்களுக்கு பிரசாதமாக வழங்கியுள்ளனர். இந்நிலையில் பிரசாதங்களை வாங்கி சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு காளஹஸ்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தகவல் அறிந்து வந்த உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மீதம் இருந்த பிரசாதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்