நேருக்கு நேர் மோதும் ராகுல் - மோடி.. களத்தில் அதிரடி ட்விஸ்ட்..!

x

கேரளாவில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி வரும் 15ஆம் தேதி கேரளாவின் அட்டிங்கல், ஆலத்தூர், திருச்சூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நாளில் ராகுல் காந்தி கோழிக்கோட்டில் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதனால் கேரளாவில் மக்களவை தேர்தல் பணிகள், அரசியல் கட்சியினரிடையே சூடுபிடித்துள்ளது. மேலும், கேரளாவில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, டி.கே.சிவக்குமார், மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பிரபல காங்கிரஸ் தலைவர்களும் பல்வேறு நாட்களில் பிரச்சாரம் செய்யவுள்ளனர். இதே போன்று, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரை ஆதரித்து அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அண்ணாமலை உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்யவுள்ளது, குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்