போதை மறுவாழ்வு மையத்தில் மருத்துக்கள் திருட்டு..கேரளாவில் பரபரப்பு

x

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து 577 புப்ரெனார்ஃபின் மாத்திரைகளை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். மூவாட்டுபுழா அரசு மருத்துவமனை வளாகத்தில் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, போதைக்கு அடிமையானோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக புப்ரெனார்ஃபின் மாத்திரைகள் பீரோவில் வைத்திருந்தனர். இந்நிலையில், மையத்திற்குள் புகுந்த நபர்கள் பீரோவை உடைத்து, உள்ளே இருந்த மாத்திரைகளை திருடிச் சென்றனர். போதைக்கு அடிமையானவர்கள் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்