திடீரென பற்றிய மார்க்கெட்.. அடுத்தடுத்து மளமளவென எரிந்து கருகிய கடைகள் - பரபரப்பு காட்சி

x

உத்தரப்பிரதேசத்தில் மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து ஏராளமான கடைகள் சேதமடைந்தன. உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காத் பஜார் சந்தையில், ஒரு கடையில் தீ ஏற்பட்டது. இதையடுத்து, தீ மளமளவென பற்றி அருகிலுள்ள கடைகளுக்கு பரவியது. இதில் ஏராளமான பொருட்கள் தீக்கிரையாகின. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்