ஏராளமான பெண்கள்..சினிமா பிரபலங்கள்..பகவல் சிங் வீட்டில் நடந்தது என்ன? நரபலி சம்பவம்-அடுத்த அதிர்ச்சி

x

ஏராளமான பெண்கள்..சினிமா பிரபலங்கள்..பகவல் சிங் வீட்டில் நடந்தது என்ன?

நரபலி சம்பவம்-அடுத்த அதிர்ச்சி

கேரளாவில் நரபலி சம்பவத்தில் பகவல்சிங் வீட்டிற்கு சிகிச்சைக்கு வந்த சினிமா நட்சத்திரங்களிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா அருகே உள்ள இலந்தூரில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் மந்திரவாதி முகமது ஷாபி, டாக்டர் பகவல் சிங், அவரது மனைவி லைலா என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் நாட்டு வைத்தியரான பகவல் சிங் தனது வீட்டிலும், பிரபலங்களின் வீடுகளுக்கும் சென்று சிகிச்சை அளித்துள்ளார்.

மலையாள சினிமாவை சேர்ந்த சில நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்ளும் பகவல் சிங் வீட்டிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

அவர்கள் யார்? யார்? என்ற விபரங்களை போலீசார் சேகரிக்க தொடங்கி உள்ளனர்.

அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

வந்து சென்றதாக கூறப்படும் நிலையில் பகவல்சிங் வீட்டில் பாலியல் தொழில் நடந்ததா? என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்