பள்ளி மாணவியை வெறி தீர கத்தியால் குத்தி.. ரத்தம் சொட்ட சொட்ட காரில் கடத்திய நபர் - நடுரோட்டில் நடந்த பயங்கரம்

x

கர்நாடகாவில், காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் தாக்கி, காரில் கடத்திச் சென்று கொல்ல முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியை மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்றது குறித்து போலீசாருக்கு சக மாணவிகள் தகவல் தெரிவித்தனர். பதிவெண்ணை கொண்டு காரை போலீசார் துரத்திப்பிடித்தனர். காரை போலீசார் மடக்கியதும் காரை ஓட்டி வந்த நபர் அதிலிருந்து குதித்து தப்பியோடிவிட்டார். கடத்தப்பட்ட மாணவி கத்தியால் பலமுறை குத்தப்பட்டு மயங்கி நிலையில் காரில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், காரை ஓட்டி வந்த நபரை தேடி வருகின்றனர். காரை ஓட்டி வந்த நபர் அந்தப் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலை ஏற்க மறுத்ததால் அப்பெண்ணை கடத்திக் கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்