பெண்களை துன்புறுத்திய திரிணாமூல் காங். நிர்வாகி... வாக்குமூலம் பெற்று அதிகாரிகள் ஆய்வு - அதிர்ச்சியில் மம்தா

x

மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காளியில், தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர், 2-வது நாளாக ஆய்வு நடத்துகின்றனர். வடக்கு 24 பர்கானா மாவட்டம் சந்தேஷ்காளி கிராமத்தில், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் கூட்டாளிகள், பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழுவினர் சந்தேஷ்காளி கிராமத்தில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழுவினர், 2வது நாளாக ஆய்வு செய்ய படகு மூலம் சந்தேஷ்காளி வந்தடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்