ஒரு நொடியில் விஷமாக மாறிய ஷவர்மா - இளைஞர்களுக்கு காத்திருந்த ஷாக்

x

மகாராஷ்டிர மாநிலம் கோரேகான் பகுதியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று, மும்பையின் கிழக்கு கோரேகன் பகுதியில் உணவு உபாதை காரணமாக 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்ததில் கோரேகன் சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சேட்டிலைட் டவரில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட 12 பேரில் 9 பேர் உடல்நலம் சரியாகி வீடு திரும்பிய நிலையில், பாதிக்கப்படட் அனைவரும் ஷவர்மா சாப்பிட்டு பாதிக்கப்பட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்