மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்.. அடுத்தடுத்து 3 பைக் மீது மோதல் -பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேரள மாநிலம் வயநாட்டில் அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று, 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், ஒருவர் உயிரிழந்தார்.
x

கேரள மாநிலம் வயநாட்டில் அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று, 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். வயநாட்டில், அதிவேகத்தில் சென்ற சொகுசு கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த 3 இருசக்கர வாகனங்களின் மீது மோதி, சாலையோரத்தில் உள்ள வீட்டின் மதில் சுவரில் இடித்து நின்றது. இந்த விபத்தில் காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகனம் இழுத்து வரப்பட்டு, அதில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 5 பேர் படுகாயமடைந்த நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்