உயிரை பறித்த லாட்டரி - ரூ.25 கோடிக்காக நண்பனையே சரமாரியாக வெட்டிய கொடூரம்

x

கொடுத்து வைத்திருந்த லாட்டரி சீட்டை திருப்பி தர மறுத்த நண்பனை, மரம் வெட்டும் கத்தியால் நபர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கொல்லம் அருகே தேவலக்கரையை சேர்ந்தவர்கள் தேவதாஸ் மற்றும் அஜித். இருவரும், மரம் வெட்டும் கூலித்தொழிலளியாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், 25 கோடி ரூபாய்க்கான லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கிய தேவதாஸ், அதை பத்திரமாக வைத்திருக்குமாறு அஜித்திடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று லாட்டரி சீட்டுகளுக்கான குலுக்கல் நடைபெற்ற நிலையில், அஜித்திடம் லாட்டரி சீட்டை திருப்பி தருமாறு தேவதாஸ் கேட்டிருக்கிறார். அப்போது, இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், அஜித் லாட்டரி சீட்டை தர மறுத்ததால் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், அருகில் இருந்த மரம் வெட்டும் கத்தியால் தேவதாசை அஜித் சரமாரியாக வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தேவதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தேவதாஸின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரது நண்பர் அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்