கச்சத்தீவை தொடர்ந்து காஷ்மீர்... Art 370ஐ மீண்டும் கையிலெடுத்த PM மோடி... பரபரப்பு பேச்சு

x

காங்கிரஸ் கட்சி, கச்சத்தீவு பற்றி கவலைப்படாதது போல், காஷ்மீர் குறித்தும் அக்கறை காட்டவில்லை என்று, பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அனைத்தும் குற்றத்தில் பங்குதாரர்கள் என்று கூறினார். ஒருவரையொருவர் காப்பாற்ற இந்தியா கூட்டணியை உருவாக்கியதாக தெரிவித்த மோடி, 'ஊழல் ஒழிக' என்று நான் சொல்கிறேன், ஆனால் அவர்கள் 'ஊழல் தலைவர்களைக் காப்பாற்றுங்கள்' என்று தெரிவிப்பதாக கூறினார். ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை காங்கிரஸ் கொண்டு வந்ததாகவும், வலுவான பாஜக அரசு 370 வது பிரிவை ரத்து செய்ததாகவும் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி, கச்சத்தீவு பற்றி கவலைப்படாதது போல், காஷ்மீர் மீதும் அக்கறை காட்டவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்