முந்திரி பழத்திலிருந்து மதுபானம்.. கேரளாவில் புதிய முயற்சி

கேரளாவில் முந்திரி பழத்திலிருந்து மதுபானம் தயாரித்து விற்பனை செய்ய, கண்ணூர் பையாவூர் சர்வீஸ் கூட்டுறவு வங்கிக்கு உரிமம் கிடைத்துள்ளது....
x

முந்திரி பழத்திலிருந்து மதுபானம்.. கேரளாவில் புதிய முயற்சி

கேரளாவில் முந்திரி பழத்திலிருந்து மதுபானம் தயாரித்து விற்பனை செய்ய, கண்ணூர் பையாவூர் சர்வீஸ் கூட்டுறவு வங்கிக்கு உரிமம் கிடைத்துள்ளது.

கேரளாவில் அதிகளவில் உற்பத்தியாகி வரும் முந்திரியை, மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கண்ணூரில் உள்ள பையாவூர் சர்வீஸ் கூட்டுறவு வங்கியில், ஃபெனி எனப்படும் முந்திரி மதுபானம் தயாரிக்க உரிமம் கிடைத்துள்ளது. ஒரு லிட்டர் ஃபெனியின் உற்பத்தி செலவு இருநூறு ரூபாயாகவும், விற்பனை விலை ஐந்நூறு ரூபாயாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலால் துறையின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன், டிசம்பர் மாதத்திற்குள் ஃபெனி உற்பத்தி தொடங்கப்படலாம் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்