விஸ்வரூபம் எடுக்கும் கொடநாடு விவகாரம் .. ஆய்வில் கிடைத்த துப்பு.. விரைவில் வெளிவரும் ரகசியம்

x

கொடநாடு பங்களாவில் பொதுப்பணித்துறை மற்றும் தடவியல் துறையினர் சேகரித்த தகவல்கள், சிபிசிஐடி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக கொடநாடு பங்களாவில் கடந்த 7ஆம் தேதி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது சேகரித்த தகவல்களை சிபிசிஐடி போலீசாருக்கு வழங்குமாறு நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த தகவல்கள் கோவையில் உள்ள சிபிசிஐடி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்