கிணற்றிலிருந்து கேட்ட அபாய அழுகுரல்.. அதிர்ந்த ஊர் மக்கள்.. கேரளாவில் பயங்கரம்

x

கேரளாவில் காட்டுப்பன்றி துரத்தியதால், கிணற்றில் தவறி விழுந்த பெண் ஒருவர், இருபது மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார். பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் பருத்திப்பாறையை சேர்ந்தவர் எலிசபெத். இவர், காட்டுப்பன்றி துரத்தியதால், தப்பிக்க கிணற்றின் சுவரில் ஏறியுள்ளார். அப்போது, நிலை தடுமாறி 50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். கத்தி கூச்சலிட்டும் யாருக்கும் கேட்கவில்லை. அதே நேரத்தில், எலிசபெத்தை காணாத‌தால், காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் கொடுத்தனர். இதனால், அந்த பகுதியில் போலீசார் தேடியபோது, கிணற்றில் இருந்து அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து, விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், 20 மணி நேரமாக த‌த்தளித்துக் கொண்டிருந்த எலிசபெத்தை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்