தமிழக பெண் துடிதுடிக்க கொடூர கொலை,உடல் அருகே அமர்ந்து காளி பூஜை நரபலி சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்

x

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில், தர்மபுரியை சேர்ந்த பத்மா உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முகமது ஷபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதான 3 பேரையும், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நரபலி கொடுக்கப்பட்ட பத்மா மற்றும் ரோஸ்லினுக்கு சொந்தமான செல்போன் மற்றும் உடமைகள், வழியில் வீசப்பட்டதாக முகம்மது ஷபி போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, பொருட்கள் வீசப்பட்ட இடத்தில், ஷபியை அழைத்துச் சென்று போலீசார் தேடினர்.

அப்போது, ரோஸ்லினின் செல்போன் மற்றும் Bagஐ போலீசார் மீட்டுள்ளனர்.

இதனிடையே, பத்மாவை கொடூரமாக கொலை செய்த பின்னர், அவரது உடலுக்கு அருகே அமர்ந்து 3 பேரும் அமர்ந்து காளி பூஜை நடத்தியது தெரியவந்துள்ளது.

உடலின் தலைப்பகுதியில் காளியின் புகைப்படம் வைத்து பூஜை நடத்தப்பட்டுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்