செய்ய கூடாததை செய்த தாய்... நொடியில் 2 ஆண் குழந்தைகள் உயிரை பறித்த எமன் - ஐசியுவில் பெண் குழந்தை

x

மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில், 2 ஆண் குழந்தைகள் பலியானது. கேரளா மாநிலம் திருச்சூர் வெள்ளட்டாஞ்சூர் பகுதியை சேர்ந்த அகில்-சயனா தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர். இதற்கிடையே கடன் தொல்லையால் இருக்கும் வீட்டை விற்பது தொடர்பாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சயானா 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் 4 பேரையும் வெளியே கொண்டு வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 7 மற்றும் 6 வயதான அபிஜய், ஆதிதேவ் ஆகிய இரு ஆண்குழந்தைகளும் பலியாகினர். தாய் மற்றும் பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்